ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது நீதித்துறைக்கும் பெருமை சேர்த்த நமது முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு. நிஷாந்த் அவர்களுக்கு 04.12.2019 புதன் கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வழங்கி திரு. நிஷாந்த் அவர்களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார். விழாவில் நமது ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Dec 04 2019