மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை இவர் ஒரு தமிழ் புலவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும், தமிழின் முதன் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை எழுதியவரும் இவரே இவர் ஒரு நீதிமன்ற ஊழியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரெகார்ட் கீப்பர் ஆக பணிபுரிந்து, Thubash தற்போது Translator ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் மாயவரம் ஜட்ஜ் ஆகி பணி ஓய்வு பெற்றவர். இவருடைய சிலை மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ளது. இவர் 11.10.1826 அன்று பிறந்தார். அவருடைய பிறந்தநாள் இன்று. நமது முன்னோடி முன்னாள் நீதிமன்ற ஊழியர் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்களது சிலைக்கு மதுரை மாவட்ட மையத்தின் சார்பாகவும் மாநில மையத்தின் சார்பாகவும் இன்று (11-10-2019) மாலை 6.00 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Jun 28 2020
கொரோனா தொற்று – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட மையத்தின் சார்பில் கபசுர குடிநீர் குமரி மாவட்ட நீதிமன்றங்களில் நீதித்துறை ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது
Jun 27 2020
கொரோனா தொற்று – உதவி கரம்
கொரோனா தொற்றால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நீதித்துறை ஊழியர்களிடமிருந்து முதல் கட்டமாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 15,000/-லிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 1,000/- அளவில் அன்றாட தேவைகளுக்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக ரூபாய் 21,000/- ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்டு அதனுடன் சங்க நிதியிலிருந்து ரூபாய் 5,000/- சேர்த்து ரூபாய் 26,000/- அளவிலான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆறுகாணி அருகே அமைந்துள்ள மலைவாழ் கிராமமான சிறுகடத்துக்காணி பகுதியில் உள்ள சுமார் 70 குடும்பங்களுக்கு ஆறுகாணி காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
Jun 27 2020
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முக கவசம் வழங்கியது
நாகர்கோவில் சார்பு நீதிமன்ற ஊழியர் திருமதி. விஜயராணி அவர்களது முயற்சியால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவரகள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து பணியாற்ற அவராகவே முன்வந்து 15 முக கவசங்கள் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தயார் செய்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் திரு. மணிமுத்து கலந்து கொண்டார்.
Jan 11 2020
நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா
Dec 04 2019
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது நீதித்துறைக்கும் பெருமை சேர்த்த நமது முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு. நிஷாந்த் அவர்களுக்கு 04.12.2019 புதன் கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வழங்கி திரு. நிஷாந்த் அவர்களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார். விழாவில் நமது ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Nov 16 2019
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் 16.11.2019 சனிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணியளவில் மாநில தலைவர் தோழர். செந்தில் குமார் அவர்களால் கொடியேற்றி துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் *நீதித்துறையில் பணியாற்றி காலமான தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு சரியாக 10.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயலாளர் திரு. மங்கை மணவாளன் அவர்களால் வரவேற்புரை வழங்கி தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க *மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தோழர். வெங்கடேசன், நமது முன்னாள் மாநில தலைவர் தோழர். கருணாகரன், *முன்னாள் மாநில துணை தலைவர் மண்ணின் மைந்தர் தோழர். வேதமணி, கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் தோழர். லெக்ஷ்மண பெருமாள் ஆகியோருக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டு, எழுத்து மூலமாக வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் அறிக்கையின் மீது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த மாவட்ட நிர்வாகிகள் விவாதம் மேற்கொண்டனர். *மொத்தம் 25 மாவட்டங்கள் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட நிர்வாகிகளின் விவாதங்களின் அடிப்படையில் மாநில மையத்தால் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
மேலும் மாநில செயற்குழுவிற்கான காலை மற்றும் மதிய உணவு வகைகளை சிறந்த முறையில் சுவையாக அமைத்து தந்த தோழர் சங்கர் குமார் மற்றும் அவருடன் இணைந்து இரவெல்லாம் கண்விழித்து உதவி செய்த உணவு ஏற்பாடு குழு உறுப்பினர்கள் தோழர்கள் சிவா, பிரசாத், யோகேஸ்வரன், சுப்பிரமணி ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்களை சிறந்த முறையில் வரவேற்ற தோழர்கள் மணிமுத்து, மங்கை மணவாளன், ராஜன், அபிஷேக், ஐவர், கோபி, சாந்தி மற்றும் சிவகாமி ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மேடை அலங்காரம் செய்து அண்ணன் மணிமுத்து, சுப்பிரமணி, தம்பி ஜோஸ், அபிஷேக், ஐவர், பூர்ணராஜ், மாரி, வீரமணி, சரவணகுமார், வள்ளிக்கண்ணு, நாகமணி, ஹரிகிருஷ்ணன், நாகராஜன், சீனிவாசன், வினாயகம்,
சகோதரி சாந்தி, சிவகாமி, விஜயகீதா, மார்கரெட் வித்யா, ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்த அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநில செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
Nov 05 2019
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி என்பவரை,04.11.2019 அன்று மாலை தனது சேம்பரில் வைத்து, முறையாக தட்டச்சு செய்யவில்லை என்ற காரணத்திற்காக லெட்டர் பேடினை எடுத்து எறிந்ததில் திருமதி. சாரதியின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டுள்ள
இந்த கொடூரச்செயலை கண்டித்து 05-11-2019 *மாலை 6.00 மணிக்கு நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தினை சிறப்பித்தனர்.